தேசிய செய்திகள்

பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் அசாத் பண்டிட்டை பயங்கரவாத தொடர்பு காரணமாக தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது. அவரை விசாரணை செய்துவந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது ரிஸ்வான் உயிரிழந்ததை கண்டித்து, காஷ்மீரில் இன்று முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்து இருந்தனர்.

இந்த முழு அடைப்பு அழைப்பால், கஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், மூடப்பட்டு இருந்தன. கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்பட்டு இருந்ததால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்து சேவையும் இயக்கப்படவில்லை. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கின.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை