தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு முழுவதும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் நீடித்ததாகவும் இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில், இந்திய தரப்பில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு