தேசிய செய்திகள்

குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் சிக்கினார்

குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் முகமது அலி (வயது 35) என்ற பாகிஸ்தானியர் பிடிபட்டார். அவர் சிந்தி பேசும் நபர் ஆவார். அவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, எல்லை தூண் 1015 அருகே எல்லை பாதுகாப்பு படையினரிடம் நேற்று முன்தினம் மாலை பிடிபட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் பலாசர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த 6-ந் தேதி, எல்லை தூண் 1,050 அருகே மற்றொரு பாகிஸ்தானியர் பிடிபட்டது நினைவுகூரத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்