தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் நேற்று பதவியேற்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

திரிபுராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த மாணிக் சாஹா கடந்த மே மாதம் அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

அதை தொடர்ந்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லவ் குமார் தேவ் வெற்றிப்பெற்றார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற பிப்லவ் குமார் தேவ் நேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பா.ஜ.க. சார்பில் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட குலாம் அலி கட்டானாவும் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் மாநிலங்களவை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து