செய்திகள்

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டி; இந்திய இணை வெற்றி

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் இணை வெற்றி பெற்று பதக்க நம்பிக்கையை தக்க வைத்துள்ளனர்.

தினத்தந்தி

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் இணையானது மேட்டியோ பெர்ரெட்டினி மற்றும் சிமோன் போலெல்லி இணையை எதிர்த்து இன்று விளையாடினர்.

இந்த போட்டியில் இந்திய இணை 4-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் நம்பிக்கை தக்க வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இத்தாலி நாட்டின் ஆண்ட்ரியாஸ் செப்பியை எதிர்த்து விளையாடினார். ஆனால் இந்த போட்டியில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரஜ்னேஷை வீழ்த்தி செப்பி வெற்றி பெற்றார். முதல் 2 ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் மற்றும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்