தமிழக செய்திகள்

1 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

தாசில்தார் நடவடிக்கையின் பேரில் 1 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் இடத்தை தனிநபர் ஒருவர் வேலி அமைத்து வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாசில்தார் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மண்டல துணை தாசில்தார் கார்த்திக்ராஜ், சர்வேயர் சுப்புராஜ், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியபிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் தனிநபர் பாதுகாப்பில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியை வருவாய்த்துறையினர் மணல் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்