தமிழக செய்திகள்

சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

வாலாஜா அருகே சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

வாலாஜா

வாலாஜாவை அடுத்த பெரிய தகரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் தோல்தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தார். கடந்த 18-ந் தேதி இரவு வாலாஜாவை அடுத்த கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை பார்த்துவிட்டு இரவில் தனது மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

கரடிகுப்பம் கிராமத்தில்உள்ள வளைவில் வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள வீட்டுகாம்பவுண்டு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்து பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு