தமிழக செய்திகள்

விழுப்புரம் புறவழிச்சாலையில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் புறவழிச்சாலையில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

சென்னையில் இருந்து காலி மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி, நேற்று அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் வரும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரியில் இருந்த காலி பாட்டில்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. இந்த விபத்தினால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் போக்குவரத்து போலீசாரும், தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான லாரியை சாலையோரமாக அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை