தமிழக செய்திகள்

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்

சுரண்டை அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு ராஜபாண்டி, கழுநீர்குளம், பட்டமுடையார்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து தனியார் வேன் மூலம் தினமும் குழந்தைகளை ஏற்றிச் செல்வது வழக்கம். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. பட்டமுடையார்புரம்- கழுநீர்குளம் செல்லும் வழியில் சரகிடங்கு என்ற பகுதி அருகே வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த 2 குழந்தைகள் லேசான காயம் அடைந்தனர். மற்ற குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு அவரவர் வீடுகளுக்கு மாற்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை