தமிழக செய்திகள்

மருத்துவ செலவு தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மருத்துவ செலவு தொகை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விசாகன் கூறினார்.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், கருவூலத்துறை இணை இயக்குனர் கமலநாதன் மாவட்ட கருவூல அலுவலர் செல்லையாராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓய்வூதியர்கள் பலர் தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். இதில் கலெக்டர் பேசுகையில், அனைத்து அலுவலர்களும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதியர்களுக்கு உதவ வேண்டும். ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவு தொகை திரும்ப கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை