தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்

தினத்தந்தி

கெங்கவல்லி:-

கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 மணி நேரம் வேலை ஒதுக்காமல், 6 மணி நேரம் வேலை தருகிறார்கள். மேலும் முழு ஊதியத்தையும் தராமல் குறைந்த அளவு ஊதியம் தருகிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து