தமிழக செய்திகள்

கடலில் மூழ்கிய விசைப்படகு

மரக்காணம் அருகே விசைப்படகு கடலில் மூழ்கியது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் ஜெய்கணேஷ், சிவராமன், சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை எதிர்பாராத விதமாக அந்த படகு கடலில் மூழ்கியது. கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் இருந்த படகு இழுத்துச்செல்லப்பட்டு கடலில் மூழ்கியதா? அல்லது மர்மநபர்கள் யாரேனும் படகில் ஓட்டை போட்டு தண்ணீர் செல்ல வழி செய்தனரா? என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மரக்காணம் போலீசாரும், கடலோர காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு