மதுரை,
மதுரை அருகே கொரோனா வந்த அச்சத்தால் ஜோதிகா என்ற பெண் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். இதில் இளம்பெண் ஜோதிகா (வயது 23), ஜோதிகாவின் மகன் ரித்தீஸ் (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் ஜோதிகாவின் தாயார் லட்சுமி (46) ஜோதிகாவின் மற்றொரு மகன் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா அச்சத்தால் 4 பேர் தற்கொலைக்கு முயன்று அதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றார். மேலும் எதுவாக இருந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என அச்சம் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.