தமிழக செய்திகள்

கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரே பலியான சிறுமி

சிலுவைபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

தினத்தந்தி

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 3ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஜனுஷிகா, பள்ளிக்கு தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

சிலுவைபுரம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், தந்தை கண் எதிரே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து