தமிழக செய்திகள்

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.

விழிப்புணர்வு ஒத்திகை

கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி உத்தரவின் பேரில் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் மற்றும் குட்டைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறை தீயணைப்பு வீரர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வால்பாறையில் முக்கிய சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மீட்டு முதலுதவிகள்

வால்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி பிரகாஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் கூழாங்கல் ஆற்றில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆறுகளில் பாதுகாப்பாக எவ்வாறு இறங்கி குளிக்க வேண்டும் என்பது குறித்தும், ஆற்றுத் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவிகள் செய்வது என்பது குறித்தும் ஒத்திகை மூலம் செயல்விளக்கம் அளித்தனர்.

வால்பாறை வருவாய் த்துறையினர், பொது மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை