தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா வரும் 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை