தமிழக செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு- சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது

தங்கம் விலை அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்ந்து சவரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடந்து விடுமோ என்ற கவலை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்த போதிலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ.6,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 வரை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து