தமிழக செய்திகள்

75 மைக்கிரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் வரும் 30ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை - தமிழக அரசு

தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

தமிழகத்தில் 75 மைக்கிரான் தடுமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பை மற்றும் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் வரும் 30ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.