தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினத்தந்தி

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை மீனவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நெய்குப்பை பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ரவி, சின்னமுத்து, இளங்கோவன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது முருகேசனின் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் வழங்கப்பட்ட பதிவு எண்ணை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்