தமிழக செய்திகள்

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் 2 பேர் அதிரடி கைது ஒரே நாளில் ரூ.2 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததாக அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் ஒரேநாளில் ரூ.2 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை போனில் பேசிய ஒரு நபர் ஆன்லைன் மூலம் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னுடைய உறவினர் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார் என்றும், சூதாட்ட அலுவலகம் சென்னை சூளை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார்.