தமிழக செய்திகள்

விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம்; அமைச்சர் துரைமுருகன்

நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும் என்று துரைமுருகன் கூறினார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...

பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...

பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.

கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.

பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.

கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...

பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை