தமிழக செய்திகள்

சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர்

சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் காட்சி அளித்தார்.

ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாணிக்கவாசகர் சுவாமி மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் நிரப்பிய 108 சங்குகள் மூலம் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இரவு வெள்ளி இடப வாகனத்தில் குருத்தோலை சப்பரத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டமும், 5-ந் தேதி வெள்ளிரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெறும். 6-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் உபதேச காட்சி நடைபெற உள்ளது. சங்காபிஷேக விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரியார் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது