தமிழக செய்திகள்

மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி

நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவலப்பம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு சக்திக்கும்பம் எடுத்து, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொண்டே கவுண்டன் பாளையத்தில் இருந்து எடுத்துச்சென்று ஆவலப்பம்பட்டி மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது.

கம்பம் நட்ட பிறகு தினமும் இரவு கோவிலை சுற்றி பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுத்தல், நேற்று அதிகாலை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை