தமிழக செய்திகள்

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

சென்னையில் தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 10ந்தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு திருவிழா என அடுத்தடுத்து பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை