தமிழக செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வேறு இடத்தில் அமைக்க முயற்சித்தும் அங்கும் எதிர்ப்பு வந்ததால் அங்கும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்வதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் தெய்வசுந்தரியை நேரில் சந்தித்து செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு