தமிழக செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இட்டமொழியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இட்டமொழியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வீடுகளுக்கு குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு