தமிழக செய்திகள்

பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு!

பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் கம்பன் நகரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வைத்திலிங்கம் என்பவரின் மனைவி ராமாயி(47), கலியபெருமாள் என்பவரின் மனைவி கற்பகம்(54) உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை