தமிழக செய்திகள்

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

ராணிப்பேட்டை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுமிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் கலவையைச் சேர்ந்த 22 வயது ஆணுக்கும் நேற்று காலை கலவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கே.வி.குப்பம் வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் சித்ரா, லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன், வட்டார சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை