தமிழக செய்திகள்

விருத்தாசலம்-சென்னை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

விருத்தாசலம்-சென்னை சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினத்தந்தி

கடலூர்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சி பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழையின் காரணமாக விருத்தாசலம்-சென்னை சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளதால் வாகன் ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து