தமிழக செய்திகள்

சித்த மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

நிலக்கோட்டை அருகே சித்த மகாலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

நிலக்கோட்டையை அடுத்த எஸ்.மேட்டுப்பட்டி அருகே, சித்தர்கள் மலையில் சித்த மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் தலைமையில் யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதன்பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் மலைப்பாதையில் 1,500 படிகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்