தமிழக செய்திகள்

ஊட்டி-மைசூர் சாலையில் உலா வரும் புள்ளி மான்கள்

வனப்பகுதியில் நன்றாக மழை பெய்துள்ளதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஊட்டி-மைசூர் சாலையில் உலா வருகின்றன.

ஊட்டி,

ஊட்டி-மைசூர் சாலையில் புள்ளி மான்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வனப்பகுதியில் நன்றாக மழை பெய்துள்ளதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஊட்டி-மைசூர் சாலையில் உலா வருகின்றன.

அவ்வாறு உலாவும் புள்ளி மான்கள் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவோ, வனவிலங்குகளுக்கு திண்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்கவோ வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வனவிலங்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது வனச்சட்டம் பாயும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு