தமிழக செய்திகள்

சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

கே.வி.குப்பம்

சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த சின்னநாகல் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. அந்த வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாகவும், வன விலங்குகள் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். வனப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவித்து, ஊராட்சி மன்றம் சார்பில் தண்டோரா போட்டு, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. ஒலிபருக்கி மற்றும் தண்டோரா அறிவிப்பு நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் என்.பாலா, வனத்துறையைச் சேர்ந்த ஜி.மாசிலாமணி, ரங்கநாதன் மற்றும் கிராமப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது வனப்பகுதிக்குள் கிராம மக்கள் யாரும் விறகு சகரிக்க செல்ல வேண்டாம், இரவில் வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டாம், கால்நடைகளை பாதுகாப்பு இல்லாமல் வெளியே விட்டு வைக்க வேண்டாம், வெளியில் நடமாடும்போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து