தமிழக செய்திகள்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவி வருகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து நெல்,வாழை உள்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க உள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்து அதன் அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை