தமிழக செய்திகள்

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.

தினத்தந்தி

திருச்சி, 

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று இந்த பயிற்சி வகுப்பில் 110 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பன்னீர்செல்வம், கிளை நிலை வேலைவாய்ப்பு அலுவலர் சரிபா ராபியா ஆகியோர் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியதுடன், தேர்வை எதிர்கொள்வது குறித்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை