தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி அருகே 2-வது நாளாககிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு இடையூறாக 2 புளியமரங்கள் உள்ளது. மரங்களை அகற்றி தார்சாலையை அளக்ககோரி சம்பந்தப்பட்ட வருவாய்துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்வில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாயில், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான வருவாய்த்துறையை கண்டித்தும், கோரிக்கையை விரைந்து நிறைவேற்றகோரியும் ஜருகு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மானியதஅள்ளி ஊராட்சி தலைவர் சிவசக்தி தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள் 2-வது நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை