தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக நாளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து