உலக செய்திகள்

பின்லாந்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்; சுற்றுலா சென்ற மாணவர்கள் உள்பட 27 பேர் காயம்

பின்லாந்து நாட்டில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சுற்றுலா சென்று, திரும்பிய மாணவர்கள் உள்பட 27 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் தலைநகர் ஹெல்சின்கிக்கு வெளியே, எஸ்பூ என்ற நகர பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்து உள்ளது.

இதில், சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் உள்பட 27 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

எனினும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதுவும் இல்லை என ஹெல்சின்கி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த பகுதியில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்