உலக செய்திகள்

முதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பூடான் சென்றார்

முதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பூடான் நாட்டுக்கு சென்றார்.

தினத்தந்தி

திம்பு,

பிரதமர் மோடியின் புதிய மந்திரி சபையில் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இவர் தனது பொறுப்புகளை ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று பூடானுக்கு சென்றார். இந்தியாவின் வடக்கில் இருக்கும் அண்டை நாடான பூடானுடன் உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கர் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த 2 நாள் பயணத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் மற்றும் பிரதமர் லேடே ஷெரிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜெய்சங்கர், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கிறார்.

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக பூடானுக்குத்தான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை