உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்சி மாகாணத்தில் ஷென்மு நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாரத வகையில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 66 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்