உலக செய்திகள்

போலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு

போலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசினர்.

தினத்தந்தி

வார்சா,

போலந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

கொரோனாவால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி, தொழில்முனைவோர் உள்பட ஏராளமானோர் நேற்று தலைநகர் வார்சாவில் போராட்டம் நடத்தினர்.

அதிக அளவில் கூடுவது சட்டவிரோதம் என்று கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதை மீறி, போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசினர். தடியடியும் நடத்தினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை