உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உளவு அமைப்பு வளாகம் அருகே இன்று நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் பயிற்சி மையத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு இயக்குநரக அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் மீது இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டொயோட்டா செடான் காரில் வந்து கொண்டிருந்த 6 பேரும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். முக்கிய சாலை பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு இயக்குநரக வளாகத்தின் முக்கிய நுழைவாயில் பகுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை