காபூல்,
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் பயிற்சி மையத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு இயக்குநரக அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் மீது இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டொயோட்டா செடான் காரில் வந்து கொண்டிருந்த 6 பேரும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். முக்கிய சாலை பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு இயக்குநரக வளாகத்தின் முக்கிய நுழைவாயில் பகுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.