உலக செய்திகள்

ஜெருசலேமில் பஸ் நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் காயம்

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

தினத்தந்தி

ஜெருசலேம்,

ஜெருசலேம் நகரின் நுழைவு பகுதியில் இன்று காலை பரபரப்பான நேரத்தில் 2 பேர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல் நாட்டின் மேகன் டேவிட் ஆடம் என்ற ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இதில், தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்சுகள் காணப்பட்டன. போலீசாரும் பாதுகாப்பிற்காக அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை