உலக செய்திகள்

பாகிஸ்தானில் இரு வெவ்வேறு தாக்குதல்கள்; 5 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். முதலில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியருகே மமுந்த் மலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் 2 போலீசார் மற்றும் 2 படையினர் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு முன், வாகனம் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்