ஆன்மிகம்

கோவை: அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அடுத்துள்ள உடையாம்பாளையம் பகுதியில் பழமைவாய்ந்த மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணப்பட்டாடை, அணிகலன்கள், ஆபரணங்கள், பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

கோவை கணபதி சத்திரோடு மணியகாரம்பாளையம் பிரிவில் அண்ணாநகர் பகுதியில் பழமைவாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவிலிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து