ஆன்மிகம்

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 19 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி ஆழ்வார் டேங்க் காட்டேஜ் விடுதி வரை நீண்ட தூரத்துக்குக் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 19 மணி நேரம் ஆனது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 536 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 612 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 37 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து