சிறப்பு அலங்காரத்தில் கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் 
ஆன்மிகம்

நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

அதேபோல் சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவில், குட்டக்கடை --புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து