ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்

ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மூலவர் தரிசனம் கிடையாது.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் 9-ந் தேதி (புதன்கிழமை) திருப்பாவாடை சேவையை முன்னிட்டு மாலை 3 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து