ஆன்மிகம்

மாசி திருவிழா: திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்த வந்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக மாசி திருவிழா நடைபெறும் நிலையில், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்