ஆன்மிகம்

திருப்போரூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்

கன்னகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடபிறப்புக்கு முந்தையநாளில் திருப்போரூர் முருகன் திருப்படி திருச்சபை சார்பில் 1,008 பக்தர்கள் பங்கேற்கும் பால்குட விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. இதற்காக பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், சென்னையில் இருந்து பாதயாத்திரையாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.

நேற்று காலை கன்னகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் பூஜைகள் நடைபெற்றன. ஆன்மிக இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்