ஆன்மிகம்

நீருக்குள் இருக்கும் சிவலிங்கம்

புதுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நார்த்தாமலை. இங்குள்ள அறிவர் கோவிலின் மலை உச்சியில் இருக்கிறது, நவால் என்ற பெயருடைய சுனை.

தினத்தந்தி

சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த சுனையின் அடியில், ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் உள்ளது. சுனையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இந்த சிவலிங்கம் தண்ணீரில் மூழ்கிய நிலையிலேயேதான் தென்படும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கத்திற்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

2018-ம் ஆண்டு இந்த சுனையில் இருந்த நீர் முழுவதையும் மின் மோட்டார் மூலம் அகற்றிவிட்டு, பின்பு வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பாதாளத்தில் இருக்கும் இந்த சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக தண்ணீருக்குள்ளேயே இருந்தும், இந்த சிவலிங்கத்தின் மீது பாசி எதுவும் படியவில்லை என்பதும் அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. சுனையை சுற்றிலும் இருக்கும் பாறை, மலைகளில் எல்லாம் பாசி படர்ந்திருக்கும் நிலையில், சிவலிங்கத்தின் மீது பட்டும் பாசியே இல்லாமல் இருந்தது, இறையருள் தான் என்று பலரும் அதிசயித்தனர்.

இந்த குடைவரை சிவலிங்கத்தை, 1876-ம் ஆண்டு, புதுக்கோட்டை மன்னனின் மனைவி, நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு வழிபட்டதாக கல்வெட்டு குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடைவரை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த குடைவரை பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்